காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

1 நிமிடத்துக்கு 1,336 பிரியாணிகள்! விருப்பமான உணவுடன் புத்தாண்டைக் கொண்டாடிய இந்தியர்கள்!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்தியாவில் நிமிடத்துக்கு 1,336 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டது குறித்து...

கோப்புப் படம்

Published On :1 ஜனவரி 2026, 6:44 pm IST

இந்தியாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நிமிடத்துக்கு 1,336 பிரியாணிகள் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026 எனும் புதிய ஆண்டின் துவக்கம் உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில், நாட்டின் முக்கிய நகரங்களில் புதன்கிழமை (டிச. 31) மாலை முதல் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்தியாவில் நேற்று இரவு 8 மணிக்குள் ஒரு நிமிடத்திற்கு சுமார் 1,336 பிரியாணிகளை ஸ்விக்கி செயலி மூலம் இந்தியர்கள் ஆர்டெர் செய்து வாங்கியதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில், ஒரே நாளில் இரவு 7.30 மணிக்குள் சுமார் 2,18,993 பிரியாணிகள் ஆன்லைன் செயலிகள் மூலம் ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பிரியாணி பெரும்பாலான இந்தியர்களின் பிரியமான உணவாகக் கருதப்படுகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டில், நொடிக்கு 3.25 ஆர்டர்கள் வீதம் சுமார் 9 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் இந்தியாவில் வாங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் கொண்டாட்டங்களில் பிரதான இடத்தை பிரியாணி பிடித்துள்ள நிலையில், புத்தாண்டு நிகழ்விற்காக, தனிநபர் ஒருவர் செயலி மூலம் 16 கிலோ பிரியாணியை ஆர்டர் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Summary

In India, 1,336 biryanis were ordered every minute on Swiggy in the lead-up to the New Year celebrations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.