நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பெண் காவலரைத் தாக்கியவருக்கு செருப்பு மாலை ஊர்வலம்!

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரைத் தாக்கி சீருடைகளை கிழித்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச்சென்ற பெண் காவலர்கள் - படம் - ஏஎன்ஐ

Updated On :5 ஜனவரி 2026, 9:46 pm IST

சத்தீஸ்கரில் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது பெண் காவலரைத் தாக்கி அவரின் சீருடைகளை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று பெண் காவலர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவருக்கு தொடர்புள்ளதாக கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி சுரங்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. டிசம்பர் 12ஆம் தேதி முதலே போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டிச. 27ஆம் தேதி 300க்கும் அதிகமானோர் கூடியதால், அப்பகுதியில் காவலர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பெண் காவலரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர், தாக்கியுள்ளனர். அத்தோடு அவரின் சீருடையையும் கிழித்து அவதூறாகப் பேசி விரட்டியுள்ளனர். இதனை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் விடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளனர்.

அந்த விடியோவில் பெண் காவலர், தன்னை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டும், அடித்து துன்புறுத்தியதோடு மட்டுமின்றி அவரின் சீருடைகளை கிழித்து எச்சரித்து விரட்டியுள்ளது பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சித்ரசென் சாஹு என்பவரை பெண் காவலர்கள் செருப்பு மாலை அணிவித்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

Chhattisgarh anti-mining protest paraded before the public presented before Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.