

விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டத்துக்கு (விபி ஜி ராம் ஜி) எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விபி ஜி ராம் ஜி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸார் இன்று (ஜன. 11) நாடு முழுவதும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காக, ஜன. 26 முதல் பிப். 2 வரையில் ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 முதல் 10 கி.மீ. தொலைவுக்கு காங்கிரஸார் நடைப்பயணம் மேற்கொள்வர்" என்றும் அறிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.