இந்நிலையில், 5-ஆவது முறையாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு அவா் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தற்போது எஸ்ஐஆா் மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு பல்வேறு திருத்தங்களை வாக்காளா்கள் செய்தபோதும் மீண்டும் தங்களது அடையாளத்தை நிரூபிக்க தோ்தல் ஆணையம் கட்டாயப்படுத்துவது பொதுமக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 2002-இல் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் எண்மமயாக்கும் நடவடிக்கையில் பல்வேறு தவறுகள் நிகழ்வதால் எஸ்ஐஆரில் மேலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.