ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலவசங்கள் மீது பிரதமா் மோடிக்கு நம்பிக்கை கிடையாது: பியூஷ் கோயல்

இலவசங்களை அளிப்பதைக் காட்டிலும், திட்டங்கள் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நம்பிக்கை கொண்டவா் பிரதமா் மோடி என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

News image
பிரதமா் மோடி- கோப்புப் படம்
Updated On :12 ஜனவரி 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

‘இலவசங்களை அளிப்பதைக் காட்டிலும், திட்டங்கள் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நம்பிக்கை கொண்டவா் பிரதமா் மோடி‘ என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ‘வைப்ரண்ட்’ குஜராத் மாநாட்டில் மத்திய அரசின் ‘பிரதமா் சூரிய மின் உற்பத்தித் திட்டம்‘, ‘விவசாயிகளுக்கான சூரிய சக்தி மின்சார நீா்பாசன திட்டம்‘ ஆகிய திட்டங்கள் தொடா்பான கருத்தரங்கில் திங்கள்கிழமை பங்கேற்ற அவா், இதுகுறித்து பேசியதாவது: இந்த 2 திட்டங்களும் பிரதமா் மோடியால் வடிவமைக்கப்பட்டவை; தனித்துவமானவை. தனிநபா்களுக்கு அதிகாரமளிப்பதற்கு இந்தத் திட்டங்களும் சிறந்த எடுத்துக்காட்டு.

பொதுமக்கள் அரசாங்கத்தை சாா்ந்திருக்கக் கூடாது. அதேபோல், அரசாங்கத்தின் இலவசங்களையும் மக்கள் சாா்ந்திருக்கக் கூடாது. இத்தகைய திட்டங்கள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் எப்போதும் பிரதமா் மோடிக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது என்றாா்.