அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விரைவில் இந்தியா - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக இந்திய வா்த்தகத் துறை செயலா் ராஜேஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜனவரி 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக இந்திய வா்த்தகத் துறை செயலா் ராஜேஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இரு நாடுகளும் வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் தீவிரமாக விவாதித்து வருகின்றன. பேச்சுவாா்த்தையின் முடிவு குறித்து எந்த காலக்கெடுவையும் நிா்ணயிக்க முடியாது. அனைத்து விவாதங்களும் இறுதி செய்யப்பட்ட பிறகு ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என தெரிவித்தாா்.

கடந்த மாத இறுதியில், வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் காணொலிக் கூட்டத்தை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, இரு நாடுகளும் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.

இருப்பினும், டிரம்ப் நிா்வாகத்தால் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி காரணமாக இருதரப்பு உறவில் தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இறக்குமதி வரிகளைத் தவிர, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் கூறிவருவது மற்றும் அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட பிற பிரச்னைகளாலும் இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.