தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

மகாத்மா காந்தி திட்டத்தின் அடிப்படைக்கே முடிவு! ராகுல் காந்தி

எம்ஜிஎன்ஆர்இஜிஏ மாநாட்டில் ராகுல் காந்தி பேசியது பற்றி...

News image

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - Photo: INC

Updated On :22 ஜனவரி 2026, 1:18 pm IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அடிப்படைக் கருத்தையே முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.

எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தின் பெயரை வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டம் (விபி ஜி ராம் ஜி) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை இத்திட்டத்துக்கான முழு நிதியும் மத்திய அரசு ஏற்றுவந்த நிலையில், தற்போது மாநில அரசுகள் 40 சதவீத பங்களிக்க வேண்டும் என்று மாற்றம் செய்துள்ளது.

மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கும், மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்ற திருத்தத்துக்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தில்லியில் எம்ஜிஎன்ஆர்இஜிஏ பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெற்று வருகின்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ராகுல் காந்தி பேசியதாவது:

”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) நோக்கம் ஏழைகளுக்கு உரிமைகளை வழங்குவதாக இருந்தது. நாட்டில் வேலைத் தேவைப்படும் எவரும் கண்ணியத்துடன் இத்திட்டத்தின் மூலம் வேலையைப் பெறலாம் என்பதே அடிப்படை நோக்கம்.

மேலும், நாட்டின் மூன்றாவது அரசு அமைப்பான பஞ்சாயத்துகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அது மக்கள் மற்றும் தொழிலாளர்களின் குரலையும், கண்ணியத்தையும் உள்ளடக்கியிருந்தது. இத்திட்டத்தின் அடிப்படையே ’உரிமை’ என்ற வார்த்தைதான். தற்போது உரிமை என்ற அடிப்படை கருத்தையே முடிவுக்கு கொண்டுவர மோடி மற்றும் பாஜக விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

The very foundation of the Mahatma Gandhi scheme has come to an end! - Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.