எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா ராகுல்? பாஜக குற்றச்சாட்டும், காங்கிரஸ் பதிலும்!

குடியரசுத் தலைவரை ராகுல் அவமதித்ததாக பாஜகவின் குற்றச்சாட்டும், காங்கிரஸின் பதிலும்...

News image

குடியரசுத் தலைவார் விருந்தில் ராகுல் காந்தி - PTI

Updated On :27 ஜனவரி 2026, 12:10 pm IST

குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் கூறியும் அஸ்ஸாம் பாரம்பரியத் துண்டை அணியவில்லை என்று பாஜக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

குடியரசு நாளையொட்டி, தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளித்த விருந்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விருந்தில், வடகிழக்கின் 8 மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்மாநிலங்களின் பாரம்பரியப் பொருள்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த வகையில் விருந்துக்கு வருகைதந்த அனைவருக்கும் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய ’கமோசா’ (துண்டு) வழங்கப்பட்டது. அனைவரும் அந்த துண்டை கழுத்தில் அணிந்திருந்தனர்.

இந்த நிலையில், விருந்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி அஸ்ஸாம் துண்டை கழுத்தில் அணிய மறுத்ததாகவும், குடியரசுத் தலைவர் இருமுறை அறிவுறுத்தியும் ராகுல் அணியவில்லை என்றும் பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு மாநிலங்களையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

“ராகுல் காந்தி கமோசா அணிந்திருந்தார். அவர் சாப்பிடும்போது அதை மடித்து வைத்தார். இதனை ஒரு பிரச்னையாக பாஜகவினர் மாற்றியுள்ளனர்.

குடியரசு நாள் அணிவகுப்பின்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை மூன்றாவது வரிசையில் அமர வைத்து அவர்கள் அரசியலமைப்பையே அவமதித்திருக்கிறார்கள். மாநில அமைச்சர்களுடன் வரிசையில் எங்களை காக்க வைத்தனர். வேண்டுமென்றே எதிர்க்கட்சியை இவ்வளவு அவமதிக்கிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களை அவமதிப்பதற்காகவே காங்கிரஸ் இப்படிச் செய்கிறது என்று பாஜக கூறுவதை நான் கண்டிக்கிறேன். அவர்கள் காங்கிரஸை அவமதிப்பதற்காகவும், வரவிருக்கும் தேர்தல்களுக்காகவும் மட்டுமே இதைச் செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தில்லி கடமைப் பாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கார்கேவுக்கும், ராகுலுக்கும் மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Did Rahul Gandhi insult the President? The BJP's accusation and the Congress's response!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.