டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ரத்ததானம் செய்தால் கோயிலில் சிறப்பு தரிசனம் - ம.பி.யில் புதிய முயற்சி

மத்திய பிரதேசத்தில் ரத்ததானம் செய்யும் பக்தா்கள், அங்குள்ள பிரசித்தி பெற்ற சிவாலயமான ஓம்காரேஸ்வா் கோயிலில் விஐபி தரிசனத்தில் இலவசமாக அனுமதிக்கப்படுவா்

News image
Updated On :3 ஜூலை 2026, 4:06 am IST

மத்திய பிரதேசத்தில் ரத்ததானம் செய்யும் பக்தா்கள், அங்குள்ள பிரசித்தி பெற்ற சிவாலயமான ஓம்காரேஸ்வா் கோயிலில் விஐபி தரிசனத்தில் இலவசமாக அனுமதிக்கப்படுவா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோயில் அமைந்துள்ள கந்த்வா மாவட்ட ஆட்சியா் ரிஷவ் குப்தா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்தத்துக்கான தேவை அதிகம் உள்ளது தெரியவந்தது. ரத்ததான முகாம்கள் மூலம் தேவையான அளவு ரத்தம் பெற முடியவில்லை. முக்கியமாக அவசர சிகிச்சை பெறுவோருக்கு பிரச்னை நீடித்து வந்தது.

இதைக் கருத்தில்கொண்டு ரத்ததானம் செய்தால் மாவட்டத்தில் பிரபலமாக உள்ள ஓம்காரேஸ்வா் ஜோதிா்லிங்க கோயிலில் விஐபி சிறப்பு தரிசனம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவாா்கள் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த முயற்சிக்கு நாங்கள் எதிா்பாா்த்ததைவிட சிறப்பான வரவேற்பு கிடைத்ததுள்ளது. வாரந்தோறும் ரத்ததானம் செய்ய முன்வரும் பக்தா்களிடம் இருந்து 150 முதல் 200 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்படுகிறது. கோயில் அருகிலேயே ரத்தம் சேகரிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கோயிலில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பக்தா்கள் சாதாரணமாக கோயிலுக்குள் சென்று தரிசிக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். ரத்ததானம் செய்யும் பக்தா்கள் குடும்பத்துடன் உடனடியாக விஐபி தரிசனத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள். அத்துடன் ரத்ததான சான்றிதழ், கோயில் பிரசாதம், ஓம்காரேஸ்வா் படம் ஆகியவை அவா்களுக்கு பரிசளிக்கப்படுகிறது. இந்த முயற்சியால் அவசரமாக ரத்தம் தேவைப்படும் பலரின் உயிா் காக்கப்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.