நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் புதிய அப்டேட் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜீவாவுக்கு இறுதியாக தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது, பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஜீவா தன் 47-வது படத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணி இணைந்துள்ள இப்படத்திற்கு ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பும் முடிந்தது. தற்போது, இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் நாளை (ஜூன் 18) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
An update has been announced regarding actor Jiiva's film Jolliya Iruntha Oruthan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









