தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

16 வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்; கண்டுகொள்ளாத பாஜக! சிஜேபி குற்றச்சாட்டு!

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் நிகழ்ந்து வரும் போராட்டம் பற்றி...

News image

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக். - படம் - எக்ஸ்

Updated On :13 ஜூலை 2026, 6:30 pm IST

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 தொடங்கி இன்று வரை 16 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அண்ணா ஹசாரே தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெறும் 11 நாள்களில் முடித்துக்கொண்டார். காங்கிரஸ் அரசு அவருக்குப் பணிய வேண்டியிருந்தது.

சோனம் வாங்சுக் கடந்த 15 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பாஜக அரசு இதைக் கண்டுகொள்ளத் தயாராக இல்லை.

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்துக்கு தவறான அரசைத் தேர்ந்தெடுத்துவிட்டாரா? இங்கு ராஜிநாமாக்கள் நடப்பது இல்லையா? அரசு எங்கே இருக்கிறது? என்று குறிப்பிட்டுள்ளது.

Summary

A protest is ongoing at Jantar Mantar in Delhi, organized by the Karappanpoochi Makkal Katchi, to condemn the irregularities in the NEET examination.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.