இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடக்கப்படுவதாக வெளிவந்த செய்திக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை (ஜூலை 13) பதில் அளித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா விரும்பவில்லை என்றும் இரு நாடுகளுக்கான பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்தியைக் குறிப்பிட்டு பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் செயலாக உள்ளது. தில்லியில் கடந்த ஜூன் மாதம், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் நான் நடத்திய சந்திப்புகள் மிகவும் சிறப்பாக அமைந்தது.
வணிகரீதியாக அர்த்தமுள்ளதாகவும், இரு நாடுகளிலும் உள்ள வணிகம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு உறுதியான பலன்களை அளிக்கும் இந்த ஒப்பந்தம் திட்டமிட்டாற்போல சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
மேலும், இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக முடிக்கும் பணிகளில் எங்கள் குழு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
This news is completely false, baseless and misleading.
— Piyush Goyal (@PiyushGoyal) July 13, 2026
I had fantastic meetings with USTR Jamieson Greer, @USTradeRep, when he visited Delhi in June. Both sides reaffirmed their commitment to an agreement that is balanced, commercially meaningful, and delivers tangible⦠https://t.co/0JZOULEL6i
Summary
Commerce and Industry Minister Piyush Goyal has responded to reports that the trade agreement between India and the United States has stalled.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: பியூஷ் கோயல்

டிசம்பருக்குள் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்: பியூஷ் கோயல்








