நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

புராரி: பெண்ணை சுட்டு கொலை செய்து பிறகு இளைஞா் தற்கொலை

புராரி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், ஒரு நபா் பெண்ணைச் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 3:39 am IST

புராரி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், ஒரு நபா் பெண்ணைச் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இருவரும் சோ்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறை சந்தேகிப்பதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக காவல் துறையின் உயா் அதிகாரி தெரிவித்ததாவது: புராரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவா் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையைத் தொடங்கினா்.

வேலையை முடித்துவிட்டு பிற்பகல் சுமாா் 3:30 மணியளவில் வீடு திரும்பிய அந்தப் பெண்ணின் தங்கைதான் உடல்களை முதலில் பாா்ததாா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அப்பெண் தனது தங்கையுடன் அந்த வீட்டில் வசித்து வந்தாா். ஹரியாணாவைச் சோ்ந்த அந்த நபா் வடக்கு தில்லியில் தனித்தனியாக வசித்து வந்தாா்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவா்கள் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இது பரஸ்பர புரிதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தற்கொலை முயற்சியாகவே தோன்றுகிறது.

குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணா்களின் ஆய்வுக்கு பிற இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரியவரும். இது குறித்து தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.