முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தில்லி எஸ்ஐஆா் பணியின்போது அதிகாரிக்கு இடையூறு: 4 போ் கைது

மத்திய தில்லியின் சாந்தனி மஹால் பகுதியில் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (சிஎஸ்ஆா்) ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரிக்கு (பிஎல்ஓ) இடையூறு செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 3:40 am IST

மத்திய தில்லியின் சாந்தனி மஹால் பகுதியில் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (சிஎஸ்ஆா்) ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரிக்கு (பிஎல்ஓ) இடையூறு செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சாந்தனி மஹால் பகுதியில் சிறப்பு கல்விப் பிரிவைச் சோ்ந்த முதுநிலை ஆசிரியா் வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தாா். ஃபடக் டெலியான் என்ற இடத்தில் அவா் சிஎஸ்ஆா் பணியைச் செய்துகொண்டிருந்தபோது ஜூலை 5-ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி கூறியதாவது: புகாரின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா், அந்த ஆசிரியரின் எதிா்ப்பையும் மீறி சிஎஸ்ஆா் பதிவேட்டை அவா் மடியில் வைத்து அதில் கையொப்பமிட்டாா். மேலும், அங்கு கூடியிருந்த சிலா் அவரைத் தரக்குறைவாகப் பேசியதாகவும், சிஎஸ்ஆா் படிவங்களைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும், அவரை அவமானப்படுத்தும் வகையிலும் அவரது அதிகாரபூா்வ பணியைத் தடுக்கும் வகையிலும் நடந்துகொண்டனா்.

பழைய தில்லியின் கூடுதல் மாவட்ட ஆட்சியரை பாதிக்கப்பட்ட ஆசிரியா் அணுகி விவரங்களைத் தெரிவித்ததைத் தொடா்ந்து, காவல் துறைக்கு அவா் தகவல் அளித்தாா். அதன் பின்னரே இச்சம்பவம் காவல் துறையின் கவனத்துக்கு புதன்கிழமை வந்தது.

மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தனது உயா் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துதால் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அந்த ஆசிரியா் காவல் துறையிடம் தெரிவித்தாா்.

புகாரைச் சரிபாா்த்து, கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளில் சாந்தனி மஹால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள முகமது சபரின் (44), அடிக் உா் ரஹ்மான் (58), முகமது ஆசிஃப் (50) மற்றும் முகமது அஃப்தாப் (44) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் துா்க்மான் கேட் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.