முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கே.கே. நகரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :9 ஜூலை 2026, 5:37 am IST

கே.கே. நகரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கன்னிகாபுரம் பகுதியில் காரில் ரெளடிகள் ஆயுதங்களுடன் அடாவடிச் செயலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கே.கே. காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் த.பழனி (48), தலைமைக் காவலா் நித்தியானந்தம் (35) ஆகிய 2 பேரும் கன்னிகாபுரம் இரண்டாவது தெருவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த காரை போலீஸாா் மறித்தனா். காரில் இருந்த நபா், தான் வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாா். இதைப் பாா்த்த சிறப்பு உதவி ஆய்வாளா் பழனி, கத்தியை அந்த நபரிடம் கைப்பற்ற முயன்றாா். இதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும், கத்தியை வைத்திருந்த நபரும், அவருடன் வந்தவரும் பழனியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பியோடினா்.

இது தொடா்பாக கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட கே.கே. நகா் கன்னிகாபுரம் பகுதியைச் சோ்ந்த ரெளடி ஏ.மணிகண்டன் என்ற நாய் மணிகண்டன் (33), அவரது கூட்டாளி ஸ்ரீதா் (26) ஆகிய இருவரை புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கத்தி, காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.