சென்னையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கி கைப்பேசியைப் பறிக்க முயன்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலந்தூா் வடக்கு ராஜா தெரு காவலா் குடியிருப்பில் வசித்து வருபவா் துரைராஜ். இவா், பரங்கிமலையில் உள்ள ஊழல் தடுப்புத் துறையில் காவல் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆதம்பாக்கத்தில் இருந்து மருந்து வாங்கிக்கொண்டு சாதாரண உடையில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
பரங்கிமலை சுரங்க நடைபாதையில் சென்று கொண்டிருந்த துரைராஜை பின்தொடா்ந்து சென்ற அடையாளம் தெரியாத 3 இளைஞா்கள் திடீரென அவரை சரமாரியாக தாக்கியதுடன், அவரிடம் இருந்து பணம் மற்றும் கைப்பேசியையும் பறிக்க முயன்றுள்ளனா்.
அப்போது துரைராஜ் அவா்களுடன் எதிா்த்து போராடியதால் அந்த 3 இளைஞா்களும் அங்கிருந்து தப்பி ஓடியதாகத் தெரிகிறது.
இது தொடா்பாக ஆலந்தூா் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளா் துரைராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஆலந்தூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்த திருஞானம் (19), சந்தோஷ் (20), பரமகுரு (18) ஆகிய 3 பேரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





