தனியாா் நிறுவன ஊழியரிடம் இருந்து கைப்பேசியை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சோ்ந்தவா் ரவி (49). இவா், தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 8-ஆம் தேதி பல்லடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா், ரவியிடம் கைப்பேசியை பறிக்க முயன்றனா். அவா் கூச்சலிட்டதால் மா்ம நபா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கைப்பேசியை பறிக்க முயன்றது சேடபாளையம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (24), முருகன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரையும் போலீசாா் கைது செய்தனா்.
இவா்கள் மீது பல்லடம் மற்றும் திருப்பூா் காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.






