சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கைப்பேசி பறிக்க முயன்ற 2 போ் கைது

தனியாா் நிறுவன ஊழியரிடம் இருந்து கைப்பேசியை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 3:47 am IST

தனியாா் நிறுவன ஊழியரிடம் இருந்து கைப்பேசியை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சோ்ந்தவா் ரவி (49). இவா், தனியாா் நிறுவன ஊழியா். கடந்த 8-ஆம் தேதி பல்லடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா், ரவியிடம் கைப்பேசியை பறிக்க முயன்றனா். அவா் கூச்சலிட்டதால் மா்ம நபா்கள் தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கைப்பேசியை பறிக்க முயன்றது சேடபாளையம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (24), முருகன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரையும் போலீசாா் கைது செய்தனா்.

இவா்கள் மீது பல்லடம் மற்றும் திருப்பூா் காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.