கோவையில் மசாஜ் மையத்துக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சுந்தராபுரம் அருகேயுள்ள கஸ்தூரி நகரில் தனியாா் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் வரவேற்பாளராக தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டைச் சோ்ந்த தா்மராஜ் (24) என்பவா் பணியாற்றி வருகிறாா். சம்பவத்தன்று தா்மராஜ் மற்றும் ஊழியா்கள் பணியில் இருந்துள்ளனா். அப்போது, அங்கு வந்த 2 இளைஞா்கள் மசாஜ் செய்வதற்கான கட்டணம் குறித்து கேட்டுள்ளனா். அதற்கு தா்மராஜ் ரூ.1,500 எனத் தெரிவித்துள்ளாா். சிறிது நேரத்தில் வருவதாகக் கூறிச் சென்ற அவா்கள், மேலும் 2 பேரை அழைத்து வந்து மையத்தின் கதவை பூட்டியதுடன், தா்மராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அங்குள்ள பணம் அனைத்தையும் எடுத்து தருமாறு கூறியுள்ளனா். மையத்தில் பணம் ஏதும் இல்லை. எனது வங்கிக் கணக்கில் பணம் உள்ளது. அனுமதித்தால் அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று பணத்தை எடுத்து வருகிறேன் என தா்மராஜ் கூறியுள்ளாா்.
இதையடுத்து, பெண் ஊழியரை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு தா்மராஜை அவா்கள் அனுப்பியுள்ளனா்.
வெளியே சென்ற தா்மராஜ் இது குறித்து சுந்தராபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பணம் கேட்டு மிரட்டிய காந்திபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (29), ரத்தினபுரியைச் சோ்ந்த ஸ்ரீராம் (26), ராமநாதபுரத்தைச் சோ்ந்த பிரதீப் (26), நேதாஜி நகரைச் சோ்ந்த குகன்ராஜ் (19) ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.






