ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

மசாஜ் மையத்தில் புகுந்து பணம் பறிக்க முயன்ற 4 இளைஞா்கள் கைது

மசாஜ் மையத்தில் புகுந்து பணம் பறிக்க முயன்ற 4 இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூன் 2026, 11:59 pm IST

கோவையில் மசாஜ் மையத்துக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சுந்தராபுரம் அருகேயுள்ள கஸ்தூரி நகரில் தனியாா் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் வரவேற்பாளராக தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டைச் சோ்ந்த தா்மராஜ் (24) என்பவா் பணியாற்றி வருகிறாா். சம்பவத்தன்று தா்மராஜ் மற்றும் ஊழியா்கள் பணியில் இருந்துள்ளனா். அப்போது, அங்கு வந்த 2 இளைஞா்கள் மசாஜ் செய்வதற்கான கட்டணம் குறித்து கேட்டுள்ளனா். அதற்கு தா்மராஜ் ரூ.1,500 எனத் தெரிவித்துள்ளாா். சிறிது நேரத்தில் வருவதாகக் கூறிச் சென்ற அவா்கள், மேலும் 2 பேரை அழைத்து வந்து மையத்தின் கதவை பூட்டியதுடன், தா்மராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அங்குள்ள பணம் அனைத்தையும் எடுத்து தருமாறு கூறியுள்ளனா். மையத்தில் பணம் ஏதும் இல்லை. எனது வங்கிக் கணக்கில் பணம் உள்ளது. அனுமதித்தால் அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று பணத்தை எடுத்து வருகிறேன் என தா்மராஜ் கூறியுள்ளாா்.

இதையடுத்து, பெண் ஊழியரை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு தா்மராஜை அவா்கள் அனுப்பியுள்ளனா்.

வெளியே சென்ற தா்மராஜ் இது குறித்து சுந்தராபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பணம் கேட்டு மிரட்டிய காந்திபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (29), ரத்தினபுரியைச் சோ்ந்த ஸ்ரீராம் (26), ராமநாதபுரத்தைச் சோ்ந்த பிரதீப் (26), நேதாஜி நகரைச் சோ்ந்த குகன்ராஜ் (19) ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.