நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், கடந்த ஜூன் 29 அன்று முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் கடைபிடித்து வருகிறார். 19 வது நாளாக இன்றும் (ஜூலை 16) சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் தொடர்வதால் அதை முடிவுக்குக் கொண்டுவரும்படி ஏராளமான அரசியல் தலைவர்கள் அவருக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் போராட்டத்துக்கு சமாஜ்வாதி, இந்திய கமயூனிஸ்ட் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஸ்வரா பாஸ்கர், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர்.
Summary
Arvind Kejriwal has extended his support to Sonam Wangchuk's hunger strike against the NEET question paper leak.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாங்சுக்கின் உண்ணாவிரதம்! மௌனம் கலைக்குமா மத்திய அரசு? ஒமர் அப்துல்லா!

மனித உயிர் மதிப்புமிக்கது! சோனம் வாங்சுக் வழக்கில் தில்லி நீதிமன்றம்!








