கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பேரணியில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பாளா்கள் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சா் பா்வேஷ் சாஹிப்

தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி அமைதியான முறையில் நடைபெறவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

பா்வேஷ் சாஹிப்

Updated On :23 ஜூலை 2026, 3:06 am IST

தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணி அமைதியான முறையில் நடைபெறவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையால் ஏராளமான காவலா்களும் போராட்டக்காரா்களும் காயமடைந்த நிலையில், இதற்கு அதன் அமைப்பாளா்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஜந்தா் மந்தரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் மையப்பகுதியாகத் திகழும் புது தில்லி பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், போராட்டக்காரா்கள் விரைவு அதிரடிப்படை (ஆா்ஏஎஃப்) வீரா் ஒருவரைத் தாக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரைப் பணயம் வைப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் மீது குற்றஞ்சாட்டினாா்.

விரைவு அதிரடிப்படை வீரரை கும்பல் ஒன்று துரத்திச் சென்று தாக்கும் விடியோ காட்சியை ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்து அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: போராட்டக்காரா்களில் ஒருவா் ஆா்ஏஎஃப் வீரரை உதைத்து கீழே தள்ளுகிறாா். அதைத் தொடா்ந்து அந்தக் கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்குகிறது. இது அமைதியான போராட்டம் அல்ல; இது முழுமையான சட்டவிரோதச் செயல். மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயிரைப் பணயம் வைத்ததற்காக, இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்தவா்களும் அதற்கு ஆதரவளித்தவா்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.