திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

பொறுப்பேற்க வேண்டும்... நீட் போராட்டத்துக்கு இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆதரவு!

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான நிஹல் சரின் பதிவு குறித்து...

News image

இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் நிஹல் சரின் - படம்: எக்ஸ் / நிஹல் சரின்.

Updated On :23 ஜூலை 2026, 3:38 pm IST

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான நிஹல் சரின் (22 வயது) தனது எக்ஸ் பக்கத்தில், “நீட் தேர்வு குளறுபடிகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரம் இருந்தார். பின்னர், வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்று ஆதரவு அளித்து வருகிறார்கள்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல மாணவர்கள் முயற்சித்தபோது, தில்லி காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி எறிந்தனர்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் நிஹல் சரின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியாவை கௌரமாக பிரதிநிதித்துவம் செய்யும் இளம் இந்தியராகிய நான் தற்போது வலியில் இருக்கிறேன்.

இளைஞர்கள் கடினமான தேர்வுக்கு எழுத செல்லும்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பது அற்பமானது அல்ல. இதற்கு தீர்வு காணாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல எனக் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்களில் இதுவரை மனு பாக்கர், யுவராஜ் சிங், அபினவ் பிந்த்ரா வரிசையில் நிஹல் சரின் தங்களது ஆதரவை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இதுவரை எதுவும் கூறாததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Indian Grandmaster Nihal Sarin says We must be accountable

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.