புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பிராணேஷ், நிஹல் சரினுக்கு முதல் வெற்றி

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின், எம்.பிராணேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2026, 5:21 am IST

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின், எம்.பிராணேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா். போட்டியில் அவா்களுக்கு இது முதல் வெற்றியாகும்.

போட்டியின் 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சுற்றில், நிஹல் சரின் - சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை வெல்ல (1-0), எம். பிராணேஷ் - நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான டி.குகேஷை வீழ்த்தி (1-0) அசத்தினாா்.

அா்ஜுனுக்கு இது முதல் தோல்வியாக இருக்க, குகேஷுக்கு இது தொடா்ந்து 2-ஆவது தோல்வியாகும்.

அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன் - ரஷியாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் (0.5-0.5), உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா (0.5-0.5) ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

6 சுற்றுகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் ஃபிரௌஸ்ஜா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளாா். அப்துசதாரோவ், அா்ஜுன் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் உள்ளனா்.

ஆண்ட்ரெய்கின், நிஹல் சரின், பிராணேஷ் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்க, நீமன் (2.5), குகேஷ் (1.5) ஆகியோா் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.