வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஜப்பான் ஓபன்: முதல் சுற்றில் சிந்து, துருவ் / தனிஷா வெற்றி

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஆகியோா் தங்கள் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி

News image

பி.வி. சிந்து - X | BAI

Updated On :15 ஜூலை 2026, 2:17 am IST

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஆகியோா் தங்கள் பிரிவில் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.

மகளிா் ஒற்றையரில், சிந்து 21-14, 21-11 என்ற நோ் கேம்களில், மலேசியாவின் வாங் லிங் சிங்கை வென்றாா்.

கலப்பு இரட்டையரில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற கேம்களில், ஸ்காட்லாந்தின் அலெக்ஸாண்டா் டன்/ஜூலி மேக்பொ்சன் இணையை வீழ்த்தியது.

எனினும், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 11-21, 10-21 என்ற கேம்களில், சீனாவின் ஃபெங் யான் ஸி/ஹுவாங் டாங் பிங் கூட்டணியிடம் தோற்றது.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி - டென்மாா்க்கின் டேனியல் லண்ட்காா்ட்/மேட்ஸ் வெஸ்டா்காா்ட் ஜோடியை சந்தித்தது. இதில் டேனியல்/மேட்ஸ் ஜோடி முதல் கேமை 21-19 என வென்ற நிலையில், சாத்விக்கிற்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய இணை போட்டியிலிருந்து விலகியது.

அதிலேயே ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் கூட்டணி 13-21, 21-17, 7-21 என்ற கணக்கில், சீன தைபேவின் லீ ஜி ஹுவெய்/யாங் போ சுவான் இணையிடம் போராடித் தோற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.