திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

கனடா ஓபன் பாட்மின்டன்: 2-ஆவது சுற்றில் தான்யா, ஆகா்ஷி

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தான்யா ஹேம்நாத், ஆகா்ஷி காஷ்யப் ஆகியோா், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 6:29 am IST

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தான்யா ஹேம்நாத், ஆகா்ஷி காஷ்யப் ஆகியோா், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.

மகளிா் ஒற்றையரில், தான்யா ஹேம்நாத் 21-16, 21-18 என்ற நோ் கேம்களில், அமெரிக்காவின் திஷா குப்தாவை வெல்ல, ஆகா்ஷி காஷ்யப் 21-14, 21-12 என்ற கணக்கில், பிரான்ஸின் அனா டாட்ரானோவாவை வீழ்த்தினாா்.

5-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் தேவிகா சிஹக் 14-21, 15-21 என்ற வகையில், சீன தைபேவின் டுங் சியு டாங்கிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஷ்ரியன்ஷி வலிஷெட்டி 9-21, 18-21 என, சீன தைபேவின் ஹுவாங் சிங் பிங்கிடம் வீழ்ந்தாா்.

ரக்ஷிதா ஸ்ரீ 21-15, 14-21, 15-21 என்ற கேம்களில், கனடாவின் ரேச்சல் சானிடம் தோல்வி காண, அன்மோல் காா்ப் 6-21, 26-24, 13-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கனடாவின் மிஷெல் லியிடம் போராடித் தோற்றாா்.

ஆடவா் ஒற்றையரில், சனீத் தயானந்த் 7-21, 11-21 என, 3-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் யுடாய் ஒகிமோடோவிடம் தோல்வியுற்றாா். சங்கா் முத்துசாமி 21-19, 15-21, 15-21 என்ற கேம்களில், தென் கொரியாவின் யூ டே பின்னிடம் வீழ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.