கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், தில்லியில், நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது.
சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லி, மும்பையில் அவ்வப்போது மழை பெய்து வரும்நிலையிலும், மழையில் நனைந்தபடி ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், மும்பையில் இன்று காலை, நீட் தேர்வுக்கு எதிராக போராடி வந்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, சாலையில், அந்த வாகனத்தை ஒரு பெண் தனியாக நின்று தடுத்து நிறுத்தினார்.
அந்த வாகனத்தில், ஏரளாமான மாணவர்களும் இளைஞர்களும் ஏற்றப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருந்த நிலையில், அந்த வாகம் மேற்கொண்டு நகராமல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டது.
மேற்கொண்டு அந்த வாகனம் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டதால், அதிலிருந்த மாணவர்கள் இறங்கி தங்களது போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். கும்பலாக சேர்ந்து போராடுவதற்கு தைரியம் இருக்கும். ஆனால், காவல்துறை வாகனத்தை தனியொரு ஆளாக தடுத்து நிறுத்தும் அளவுக்கு தைரியம் மிக்க அந்த பெண்ணின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தில்லியில், நீட் தேர்வுக்கு எதிராகப் பற்றிய தீ தற்போது நாடு முழுவதும் போராட்டமாக எரிந்து வருகிறது.
Summary
Woman stops police vehicle single-handedly! Video goes viral.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








