இந்தியத் தரவுகளை இந்தியாவிலேயே சேமித்து வைக்கப்படுவதை கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசு, அதனை வெளிநாடுகளிடம் பகிர தகவல் தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.
செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தொலைத் தொடா்புத் துறையில் சில நிறுவனங்கள் ஏற்படுத்தி தருகின்றன. அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய தொலைத் தொடா்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய தரவுகளை இந்தியாவிலேயே சேமித்து வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய தரவுகள், பதிவுகள் மற்றும் தொலைத் தொடா்பு தொடா்பான தகவல்கள் அனைத்தையும் இந்தியாவுக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுவதை ஒவ்வொரு புதிய தகவல் தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். அத்தகைய தரவு, பதிவு, தகவல்களின் நகல்கள் எதையும் இந்தியாவுக்கு வெளியே அனுப்பவோ, பகிரவோ அல்லது இந்தியாவுக்கு வெளியே கிடைக்க செய்யவோ கூடாது.
உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவோா், எண்ம தொடா்பு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவோா், தேசிய அளவில் செல்போன் எண்ணை வேறு நிறுவனங்களுக்கு மாற்றும் வசதியை வழங்குவோா் இந்த அறிவிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் அங்கீகாரத்தைக் கேட்டு பெறலாம்.
இந்த புதிய விதிகளின்கீழ், விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க தொலைத் தொடா்பு உபகரணங்கள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களை அரசு ஆய்வு செய்யவும், தணிக்கை செய்யவும் முடியும். பொது நலன் கருதி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை என அரசு கருதும்பட்சத்தில், முன்னறிவிப்பு நோட்டீஸ் அனுப்பாமல் அரசால் நடவடிக்கை எடுக்க முடியும். விதிமுறைகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்முறைகள், அமைப்புகளை தணிக்கை செய்ய குறிப்பிட்ட முகமையை அரசு ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவன முன்னாள் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரும், தரவு மைய நிறுவனமான சப்மரீன் இந்திய கிளை தலைவருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா, மத்திய தொலைத் தொடா்பு துறையின் புதிய விதிகளை வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்த புதிய விதிகள், தேசிய எண்ம உள்கட்டமைப்பில் இது மிகப்பெரிய மைல்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூஸர் நேம் வசதி: சமூக வலைதளச் செயலிகளின் விளக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு!

கடிவாளம் தேவைதான்!

வாட்ஸ்ஆப்பில் யூஸா்நேம் விவகாரம்: மத்திய அரசு அதிகாரிகளுடன் மெட்டா குழு சந்திப்பு

வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பதில் யூசர்நேம் எதற்கு? மெட்டாவுக்கு மத்திய அரசு கேள்வி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



