இந்திய ராணுவ வீரர் அவனிஷ் யாதவ் கார்கில் போரில் கொல்லப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவரது தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பலவற்றை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்று அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் - பீகார் எல்லையில் உள்ள சிதாப்தியாரா, தலெல் டோலா கிராமத்தைச் சேர்ந்த அவனிஷ் யாதவின் குடும்பத்தினர், கார்கில் போரில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது செப்டம்பர் 4, 1999 அன்று அவனிஷ் யாதவ் வீரமரணம் அடைந்ததாகத் தெரிவித்தனர்.
27-வது கார்கில் நினைவு நாளான இன்று அவரது தாயார் சோமரோ தேவி பேசுகையில், ”26 ஆண்டுகள் கடந்தும், தனது மகனின் தியாகத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளில் ஒன்றாக கிராமத்தில் அவனிஷ் யாதவ் சிலை நிறுவப்படும் என்றும், அரசு மருத்துவமனை அல்லது தொடக்கப் பள்ளிக்கு அவரது பெயர் வைக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். அதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்று தெரிவித்தார்.
அவ்னிஷ் தனது 18 வயதில் ராணுவத்தில் சேர்ந்து, 20 பாகிஸ்தான் வீரர்களை வீழ்த்தி தனது உயிரை தியாகம் செய்ததாக அவரது தந்தையும், ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எஃப் வீரருமான ஷிவ்ஜி யாதவ் கூறினார். மேலும், அவ்னிஷின் மனைவிக்கு மத்திய அரசு ஒரு பெட்ரோல் நிலையத்தை ஒதுக்கியுள்ள நிலையில், குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் எங்களை நலம் விசாரிக்கக் கூட யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பைரியா பகுதியின் துணைப் பிரிவு நீதிபதியாக சஷி மணி நாத் மிஸ்ரா சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். இந்த விவகாரத்தை விசாரித்து வரும் மிஸ்ரா, விவரங்களைச் சரிபார்த்து அரசு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Summary
For 26 years Unfulfilled promises to the family of a Kargil War martyr
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாகிஸ்தான் அத்துமீறினால் கற்பனைக்கு அப்பாற்பட்ட பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


