தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் 5 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு 11 சதவிகிதம் அதிகரிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்திருப்பது பற்றி....

News image

புற்றுநோய் - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 11:33 am IST

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு கிட்டதட்ட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-இல் நாளொன்றுக்கு சராசரியாக 36 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், 2025-இல் அதுவே நாளொன்றுக்கு 40 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஜம்மு-காஷ்மீரில் 2021-ல் மொத்தம் 13,060 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை 2022-ல் 13,395-ஆகவும், 2023-ல் 13,744-ஆகவும், 2024-ல் 14,112-ஆகவும், 2025-ல் 14,493-ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஆண்களிடையே இரைப்பை புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாக உள்ளது.

அதைத் தொடர்ந்து நுரையீரல் புற்றுநோய் காணப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோய் முதலிடத்திலும், சுமார் 9% பாதிப்புகளுடன் இரைப்பை புற்றுநோய் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

Summary

As per the figures, the daily detection of cancer cases in 2021 was nearly 36 and it has risen to about 40 a day in 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.