அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை!

ஒடிசாவில் தவுலி எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை கண்டறியப்பட்டது பற்றி....

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 9:16 am IST

ஒடிசாவில் தவுலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை தென்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மேற்கு வங்கத்தின் ஹவுராவிலிருந்து பூரி நகரை நோக்கி தவுலி எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் இரவு சுமார் 10.45 மணியளவில் மார்கோனா ரயில் நிலையத்தில் நின்றபோது, அதன் சரக்கு பெட்டி பகுதியில் இருந்து புகை வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே பாதிக்கப்பட்ட அந்தப் பெட்டி ரயிலில் இருந்து தனியாகக் கழற்றப்பட்டது.

இதன்பிறகே, ரயில் அங்கிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து கிழக்குக் கடற்கரை ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், "பயணிகளுக்கோ அல்லது ரயில்வே ஊழியர்களுக்கோ எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.

புகை எழுந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, தேவையான பரிசோதனைகளை முடித்த பின்னர், பாதிக்கப்பட்ட அந்த சரக்குப் பெட்டி ரயிலில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது என்றும், அதன்பின் இரவு 11.52 மணிக்கு ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Smoke was detected in a coach of the Dhauli Express in Odisha's Balasore district, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.