மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ராகுல் இன்று ஒப்புதல்?

50 நாள்களுக்கும் மேலாக நிரப்பப்படாத கர்நாடகத்தின் புதிய அமைச்சரவை குறித்து...

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 4:20 pm IST

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து துணை முதல்வராகப் பதவி வகித்து வந்த டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் புதிய அமைச்சரவை முழுதுமாக நிரப்பப்படாத நிலையில், பல்வேறு முக்கிய துறைகளின் பணிகள் தாமதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதில், கர்நாடகத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே புதிய அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாகப் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கும், டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவும் இந்தப் போட்டியால் புதிய அமைச்சரவையின் விரிவாக்கத்தில் இழுபறி நிலவுகிறது.

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிகே ஹரிபிரசாத், முதல்வர் டி.கே. சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மாலை காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபாலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் உறுப்பினர்களுடன் கே.சி. வேணுகோபால் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக புதிய அமைச்சரவையின் இறுதிப் பட்டியல் தயாராகிவிட்டதாகவும், புதன்கிழமை மாலை ராகுல் காந்தியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அவர் ஒப்புதல் அளித்துவிட்டால் வியாழக்கிழமை மாலை புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கர்நாடக ஆளுநர் மாளிகைக்குப் புதிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டரங்கள் தெரிவித்துள்ளன.

Summary

final-stage discussions regarding the expansion of the Karnataka Cabinet will be held with Rahul Gandhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.