FOLLOW US

ON GOOGLE DISCOVER

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ராகுல் பேச அனுமதி மறுப்பு! ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும்: மாணிக்கம் தாகூர்

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சுக்கு அனுமதி மறுப்பு குறித்து மாணிக்கம் தாகூர் பேசியது பற்றி...

News image

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - ANI

Updated On :30 ஜூலை 2026, 2:08 pm IST

நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசியதாவது, "எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு உரிமையுண்டு. ஆனால், நாடாளுமன்றத்தில் புதன்கிழமையில் ராகுல் காந்தி தனது உரையை முடிக்கை அனுமதிக்கப்படவில்லை.

இதுவரையில் இப்படி நடந்ததில்லை. இது நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் மீதான தாக்குதல். எதிர்க்கட்சித் தலைவர் தனது விருப்பத்தைச் சொல்வதற்கு உரிமையுண்டு. அதற்கு அரசும் பதிலளிக்க வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு.

ஆனால், ராகுல் காந்தி பேசுவதற்காக எழுந்து நிற்கும்போது, பாஜக அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஏதேனும் தொந்தரவு செய்கின்றனர். அவரைப் பேச அனுமதிப்பதில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும்" என்று தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை (ஜூலை 29) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் போராட்டம் குறித்து ராகுல் காந்தி பேசினார். இந்த விவாதத்தின்போது ஆர்எஸ்எஸ் குறித்து அவர் பேசியதாகவும், அவர் பேசியது நாடாளுமன்ற மரபுக்கு ஏற்றதாக இல்லை என்றும் பாஜகவினர் கூறினர். இதனையடுத்து, ராகுல் காந்தி கூறிய குறிப்பிட்ட கருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

Summary

Leader of Opposition has the right to speak in the Parliament, says Congress MP Manickam Tagore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.