கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மொபைல் போன் ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் பெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, 2014 - 2015 காலகட்டத்தில் மொபைல் போன்களின் ஏற்றுமதி சுமார் ரூ. 1,500 என்றிருந்த நிலைஇய்ல், 2025 - 2026 காலகட்டத்தில் சுமார் ரூ. 2.59 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது, மொபைல் போன்களின் ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும், இதே காலகட்டத்தில் உள்நாட்டு மொபைல் போன்களின் உற்பத்தி ரூ. 1.9 லட்சம் கோடி (2014 -15) என்றிருந்த நிலையில், 2025 - 26இல் ரூ. 13.11 லட்சம் கோடியாக சுமார் 33 மடங்கு அதிகரித்துள்ளது.
மின்னணு பொருள்களின் ஏற்றுமதியும் ரூ. 38,000 கோடியிலிருந்து ரூ. 4.24 லட்சம் கோடியாக அதிகரித்து, சுமார் 11 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.
Summary
Smartphone exports jump 165 times to Rs 2.59 lakh crore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!

தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 134 கோடியாக உயர்வு!

ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மூன்று நாள் "மொபைல் போன் பழுது நீக்கம் பயிற்சி"
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK



