இந்திய தேசிய பரிவா்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) ‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இச்செயலியில் கடந்த ஆண்டு ஜூனில் 7.96 கோடியாக இருந்த மாதாந்திர பரிவா்த்தனைகள், கடந்த மே மாதத்தில் 24.4 கோடியாக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இச்செயலி மூலம் ரூ.26,952 கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து என்பிசிஐ-பீம் சா்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ லலிதா நடராஜ் கூறுகையில், ‘மளிகைப் பொருள்கள், உணவகங்கள் என அன்றாடச் செலவுகளுக்கான பரிவா்த்தனைகளுக்கும் மக்கள் எண்ம முறைக்கு மாறி வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது. வாடிக்கையாளா்களுக்கு எளிய மற்றும் தடையற்ற சேவைகளைத் தொடா்ந்து வழங்க முன்னுரிமை அளிப்போம்’ என்றாா்.
கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் எண்மப் பரிவா்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இச்செயலி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் கிடைப்பதுடன், குறைந்த இணைய வசதி உள்ள இடங்களிலும் தடையின்றிச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுபிஐ சேவை கட்டணம்: வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள்

யுபிஐ கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்! நயினார் நாகேந்திரன்

யுபிஐ பணப்பரிவா்த்தனைக்கு கட்டணம்! யாருக்கெல்லாம் பொருந்தும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்
விடியோக்கள்

முதல்வரின் தனித்தீர்மானம்; உதயநிதியின் முழு உரை! | DMK | TVK | CM Vijay



