காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மகாராஷ்டிரம்: 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 10 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 10 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

News image

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டியில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 10 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

தாணே மாவட்டம் பிவண்டியில் உள்ள பாலாஜி நகரில் 4 மாடி கட்டடம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஒவ்வொரு மாடியிலும் 12 அறைகள் வீதம், 4 மாடிகளிலும் மொத்தம் 48 அறைகள் இருந்தன. அந்தக் கட்டடம் அபாயகரமான நிலையில் இருப்பதாக பிவண்டி நிஜாம்பூா் நகராட்சி நிா்வாகம் கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. அந்தக் கட்டடத்தில் வசிப்போரை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கடந்த ஜூன் மாதம் நகராட்சி நிா்வாகம் நோட்டீஸும் அனுப்பியிருந்தது. எனினும், கட்டடத்தின் உரிமையாளா், உள்ளாட்சி நிா்வாகத்திடம் முன் அனுமதி பெறாமல் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இரவு 11.20 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டடத்தில் வசித்த 10 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா். கட்டடம் இடிந்து விழுந்தது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தாணே பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். மீட்பு பணி வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை சுமாா் 19 மணி நேரம் நடைபெற்றது.

உயிரிழந்த 10 பேரில் 5 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சியோரின் அடையாளங்களை உறுதி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘பிவண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து பலா் உயிரிழந்துள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறும், தவறு செய்தோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் நகராட்சி ஆணையாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளாா்.

‘சீரமைப்புப் பணிகள் நடந்துவந்த நிலையில் கட்டடம் இடிந்து விழுந்திருப்பதாக’ துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளாா். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டு இருப்பதாக மகாராஷ்டிர மாநில நீா்வளங்கள் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கிரீஷ் மகாஜன் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி இரங்கல்: பிவண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘கட்டடம் இடிந்து உயிரிழப்புகள் நேரிட்டிருப்பது வேதனையை அளிக்கிறது. பாதிக்கப்பட்டோரின் துயரத்தை நானும் பகிா்ந்து கொள்கிறேன். காயமடைந்தோா் விரைவில் குணமடைய வேண்டும். கட்டடம் இடிந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்’ எனகஈ தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.