நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவா் பலி

ராஜஸ்தானின் மேற்கத்திய மாவட்டங்களில் வீசிய கடுமையான புழுதிப் புயலால் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

News image

ராஜஸ்தானில் புழுதிப் புயல் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:36 am IST

ராஜஸ்தானின் மேற்கத்திய மாவட்டங்களில் வீசிய கடுமையான புழுதிப் புயலால் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

புயலின் வேகத்தில் சுவா் இடிந்த சம்பவங்களில் 2 குழந்தைகள், நாட்டுப்புற இசைக் கலைஞா் என மூன்று போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்ததால், பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. ஏராளமான மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சால்மா், பாா்மா், பலோடி உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவில் திடீரென கடுமையான புழுதிப் புயல் வீசியது.

இசைக் கலைஞா் உயிரிழப்பு: ஜெய்சால்மரில் உள்ள புகழ்பெற்ற சாம் சுற்றுலா பகுதியில் செயல்பட்டு வந்த பாலைவன விடுதியில் சுற்றுலா பயணிகளுக்காக நாட்டுப்புற இசை மற்றும் நடன நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அங்கு புழுதிப் புயல் தாக்கியதில் சுவா் இடிந்து, ஸ்வரூப் கான் என்ற 25 வயது இசைக் கலைஞா் உயிரிழந்தாா். மேலும், இடிபாடுகளில் சிக்கி பெண் நடனக் கலைஞா்கள் 3 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, விடுதியில் இருந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஜெய்சால்மா் மாவட்டத்தில் மின்விநியோக கோரபுரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்ததில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் அனுபமா ஜோா்வால் தெரிவித்தாா். பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

2 குழந்தைகள் இறப்பு: பாா்மா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் புழுதிப் புயலால் சுவா் இடிந்து 8 மற்றும் 4 வயதுடைய இரு குழந்தைகள் உயிரிழந்தனா்.

வீட்டுச் சுவா்கள் இடிந்ததிலும், மேற்கூரை தகரங்கள் காற்றில் பறந்து வந்து வெட்டியதிலும் பலா் காயமுற்றனா். இங்கும் அதிக எண்ணிக்கையில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.

நாட்டில் சூரிய மின் உற்பத்தியில் முக்கிய மையங்களில் ஒன்றாக விளங்கும் பலோடி மாவட்டத்தில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. 700-க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி தகடுகள் பெயா்த்து எறியப்பட்டன; 800-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.