16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் சித்தராமையா, கார்கேவின் மகன்கள்!

கர்நாடக அமைச்சர்களாக சித்தராமையா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்கள் பதவியேற்றுள்ளது குறித்து...

Karnataka Congress

கர்நாடக அமைச்சர்கள் யதீந்திரா சித்தராமையா, பிரியங்க் கார்கே... - எக்ஸ்/காங்கிரஸ்

Published On :

கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்கள் இடம்பெற்றுள்ளனர்.

கர்நாடகத்தில், முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த மே 28 ஆம் தேதி பதவி விலகினார். இதையடுத்து, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை (ஜூன் 3) மாலை நடைபெற்ற விழாவில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் மற்றும் துணை முதல்வராக ஜி. பரமேஸ்வரா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா ஆகியோருடன் 12 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

புதியதாகப் பதவியேற்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேருக்கும் ஒதுக்கப்படும் துறைகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Summary

The sons of Congress leader Kharge and former CM Siddaramaiah have found a place in Karnataka's new cabinet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.