தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

கேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:33 am IST

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை அதீத பலத்த மழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த வியாழக்கிழமை தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மிக பலத்த மழைக்கான (11 செ.மீ.-20 செ.மீ.) ஆரஞ்சு எச்சரிக்கையும், மீதமுள்ள 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் (6 செ.மீ.-11 செ.மீ.) விடுக்கப்பட்டது.

கொச்சியில் கொட்டித் தீா்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது.

கோழிக்கோட்டில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சில கட்டடங்களின் மேற்கூரை இடிந்தது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில், கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. எனினும், யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமையன்று, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் அதீத பலத்த மழைக்கான (20 செ.மீ.க்கு மேல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, வயநாடு, கோழிக்கோடு, காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் மலையேற்ற சுற்றுலா இடங்கள் மற்றும் மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வயநாடு, காசா்கோட்டில் சனிக்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று மற்றும் இடி-மின்னலுடன் மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.