கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க கனகபுராவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
சிவகுமார் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது தொகுதியான கனகபுராவிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் பயணத்தின் போது, சிவகுமார் சக பயணிகளை வாழ்த்தியதோடு அவர்களுடன் உரையாடவும் செய்தார். பெங்களூரு மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவே முதல்வர் சிவகுமார் மெட்ரோவில் பயணித்ததாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகுமார் விதான் சவுதா நிலையத்திலிருந்து கனகபுரா சாலையில் உள்ள கடைசி நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கனகபுரா சென்றடைந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், நான் முதல்வரானதும் தொகுதி மக்கள் என்னைச் சந்திக்க விரும்பினர். ஆனால் என்னால் அவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.
நானும் அவர்களை பெங்களூருக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அவர்களைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்தேன். எனவே, எனது மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதற்காக எனது தொகுதிக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். கடந்த 40 ஆண்டுகளாக என்னை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பது எனது கடமையாகும் என்று தெரிவித்தார்.
கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 13 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.
Summary
Karnataka Chief Minister D K Shivakumar travelled by Metro rail on Sunday while heading to Kanakapura to participate in a "gratitude tour" aimed at thanking people of his constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இழுபறியில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! தில்லி சென்றார் முதல்வர் சிவகுமார்!

40 நாள்களாகியும் நிரப்பப்படாத கர்நாடக அமைச்சரவை! முதல்வர் சிவகுமார் விரைவில் தில்லி பயணம்!

எஸ்ஐஆர் பணிகளுக்கு கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும்! - முதல்வர் சிவகுமார் உறுதி!

கர்நாடக அமைச்சரவை எப்போது விரிவாக்கம்? உறுப்பினர்கள் இடையே மீண்டும் போட்டி!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



