இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி தில்லிக்கு இன்று (ஜூன் 7) புறப்பட்டார்.
திரிணமூல் மூத்த தலைவர்கள் டோலா சென், கல்யாண் பானர்ஜி ஆகியோரும் மமதா உடன் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்த நிலையில், மமதா பானர்ஜி தோல்விக்குப் பிறகு நடைபெறும் இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டமாகும்.
பாஜகவின் வளர்ந்துவரும் அரசியலால் ஏற்படும் நெருக்கடிகள் மட்டுமின்றி, இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதால், இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு மிக முக்கிய கூட்டமாக இது பார்க்கப்படுகிறது.
ஜூன் 8 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கப்போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துள்ளது.
திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.
மற்றொரு கட்சிக்குச் செல்வது குறித்து கலந்தாலோசிக்காமல் சென்றதால், துரோகமாக இதனை திமுக கருதுகிறது. இதனால் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என அறிவித்துவித்துள்ளது.
Summary
Mamata Banerjee leaves for Delhi to take part in INDIA bloc meeting
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








