இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜூன் 7) தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளதாவது:
''ஜூன் 8, திங்கள் கிழமை நண்பகல் 12 மணிக்கு, தில்லி அரசியலமைப்பு மன்றத்தில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்த சிறப்புக் கூட்டத்தில் ஒருசில காரணங்களுக்காக சில கட்சிகள் பங்கேற்கவில்லை. எனினும் மோடி அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் அவர்கள் அழுத்தமாக ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஜனநாயகத்தின் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்துவது, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஓயாத பணவீக்கத்தின் மூலம் நடுத்தரக் குடும்ப பட்ஜெட்டை சீர்குலைப்பது, லட்சக்கணக்கான இளைஞர்கள், தேர்வர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பது, முதலீட்டு சூழலை பலவீனமாக்குவது மற்றும் வெளியுறவுக் கொள்கையில் சமரசம் செய்துகொள்வது போன்றவற்றில் பாஜகவுக்கு எதிராக அவர்கள் நம்முடன் இணைந்து நிற்கின்றனர்.
இந்தியாவைப் போன்று இந்தியா கூட்டணியும் பன்முகத்தன்மையில் ஒன்றுபட்டு நிற்கிறது'' என ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
Summary
INDIA bloc meeting to convene tomorrow with 23 parties Congress leader Jairam Ramesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









