FOLLOW US

ON GOOGLE DISCOVER

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

மகளிர் உரிமைத்தொகை எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அனைவரின் பெயர்களும் இடம்பெறும் என அமைச்சர் ரமேஷ் உறுதி

News image

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 6:12 pm IST

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அனைவரின் பெயர்களும் இடம்பெறும் என அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.

திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது, "முதல்வர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், உங்கள் தேவைகளைப் பெரும்பாலும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நல்லாட்சியாகவே இருக்கும்.

மக்கள் கோரிக்கை மனுக்கள் ஏதேனும் கொடுக்கும்போது, அதனை அன்றைய நாளிலோ உடனடியாகவோ தீர்வுகாண முடியாது என்ற சூழ்நிலை என்பது அனைவருக்கும் தெரியும். இதனைப் புரிந்துகொண்டு மக்கள் அவகாசம் தர வேண்டும்.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை ரூ. 2,500 தருவதாக தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் கூறியிருந்தார். இதற்கான வேலை தொடங்கும்போது, உங்கள் அனைவரின் பெயர்களும் அதில் இடம்பெற்று விடும்.

இதுவரையில் வாங்கியவர்களுக்கும் சரி, வாங்காதவர்களுக்கும் சரி - திட்டத்தைத் தொடங்கும்போது அதில் அனைவரின் பெயர்களும் இடம்பெற்று விடும்" என்று தெரிவித்தார்.

Summary

Minister Ramesh assures that everyone's names will be included in the Magalir Urimai Thogai Scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.