‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாலக்காட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சொத்துகளைச் சேதப்படுத்திய மர்ம நபர்!

பாலக்காட்டில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சொத்துகளைச் சேதப்படுத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Man steals parked KSRTC bus, damages properties in Palakkad

திருடப்பட்ட பேருந்து.

Published On :

பாலக்காட்டில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சொத்துகளைச் சேதப்படுத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம், பாலக்காடு பணிமனைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடிச் சென்றுள்ளார். பின்னர் பேருந்தை கைவிட்டுச் செல்வதற்கு முன்பு வீட்டின் சுற்றுச்சுவரையும் கடையையும் சேதப்படுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை பாலக்காடு நகரில் உள்ள மங்களம் டவர்ஸ் அருகே சாலையோரத்தில் பேருந்து கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது பேருந்தும் சேதமடைந்தது. மர்மநபரை அடையாளம் காண நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பாலக்காடு தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகளை அனுமதியின்றி ஓட்டிச் சென்ற இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Summary

An unidentified man allegedly stole a parked KSRTC bus from near the Palakkad depot and damaged a house compound wall and a shop before abandoning the vehicle, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.