பாலக்காட்டில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சொத்துகளைச் சேதப்படுத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு பணிமனைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடிச் சென்றுள்ளார். பின்னர் பேருந்தை கைவிட்டுச் செல்வதற்கு முன்பு வீட்டின் சுற்றுச்சுவரையும் கடையையும் சேதப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை பாலக்காடு நகரில் உள்ள மங்களம் டவர்ஸ் அருகே சாலையோரத்தில் பேருந்து கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது பேருந்தும் சேதமடைந்தது. மர்மநபரை அடையாளம் காண நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பாலக்காடு தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகளை அனுமதியின்றி ஓட்டிச் சென்ற இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Summary
An unidentified man allegedly stole a parked KSRTC bus from near the Palakkad depot and damaged a house compound wall and a shop before abandoning the vehicle, police said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்த ராட்சத மரம்! அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய மக்கள்!

உ.பி.யில் அனுமன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

புதுச்சேரியில் சாலையோரம் நின்ற பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு







