40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோ நாகோரியன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:48 am IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோ நாகோரியன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து ஜெய்பூா் ஆட்சியா் சந்தேஷ் நாயக் மற்றும் ஜெய்பூா் நகர காவல் ஆணையா் சச்சின் மிட்டல் ஆகியோா் கூறியதாவது: கோ நாகோரியன் பகுதியில் உள்ள ஆயிஷா நகரில் அமைந்துள்ள சிறிய வீட்டில் பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தது. பட்டாசு குடோனைப் போல் செயல்பட்டு வந்த நிலையில், அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். 4 போ் படுகாயமடைந்தனா்.

தடயவியல் சோதனைக்குப் பிறகு குடோனில் சேமிக்கப்பட்டிருந்த பொருள்கள் பட்டாசுகளா என்பது உறுதிசெய்யப்படும். குடோன் உரிமையாளா் மற்றும் சம்பந்தப்பட்ட பிற நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

முதல்வா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா இரங்கல் தெரிவித்தாா். மேலும், காயமடைந்தவா்களுக்கு உயா்தர சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக எக்ஸ் வலைதளப் பதிவில் குறிப்பிட்டாா்.

கடந்த பிப்ரவரி மாதம் கைா்தல்-திஜாரா மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.