ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!

வர்த்தகர்களை விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையாகச் சாடினார்.

News image

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் - file photo

Updated On :9 ஜூன் 2026, 4:30 pm IST

வர்த்தகர்களை விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையாகச் சாடினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பஞ்சாபின் இந்து வர்த்தகர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகத் திகழ்வதுடன், வளமான பஞ்சாப் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளதாக இந்தியில் பதிவிட்டுள்ளார்.

ஈடி கட்சி என விமர்சிக்கப்படும் பாஜகவைச் சாடிய பகவந்த் மான், மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வர்த்தகர்களைத் துன்புறுத்தவே பாஜக விரும்புகிறது.

வர்த்தகர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்கின்றனர். இதைப் பஞ்சாப் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். பஞ்சாப் அரசு வர்த்தகர்களுடன் துணை நிற்கிறது.

மொபைல் போன் விற்பனை தொடர்பான ரூ. 100 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கு மற்றும் அதுதொடர்பான பணமோசடி விசாரணைக்காக அமைச்சர் அரோரா மற்றும் சிலரின் இடங்களில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனைகள் நடத்தியது.

பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் லூதியானா, மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பரேலி மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள சுமார் ஆறு இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சண்டீகரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நாள் முழுவதும் நடைபெற்ற சோதனைகளுக்குப் பிறகு, 62 வயதான அரோரா கடந்த மாதம் மத்திய அமைப்பால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

அரோரா மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, பஞ்சாப் அரசு அவரது துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கியது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய இந்து முகமாகவும், லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபராகவும் திகழ்கிறார்.

Chief Minister Bhagwant Mann on Tuesday slammed the Modi government for "harassing traders" after the ED conducted raids in a money laundering probe involving Punjab Minister Sanjeev Arora.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.