எதிரணியில் குழப்பமான சூழல் நிலவுவதால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு பரீசிலிப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பாகவே இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்தது.
அதன்படி, 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.
ஓா் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை.
மேற்கண்ட மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் 528 உறுப்பினா்கள் பங்கேற்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன.
மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துடன் இணைந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மசோதாவை எதிா்க்கட்சிகள் தோற்கடித்தன.
திமுகவிடம் ஆதரவு கோர முயற்சி?: இந்தச் சூழலில், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு அரசியல் நிலவரம் மாற்றம் கண்டுள்ளது.
தமிழகத்தில் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதனால் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும் காங்கிரஸ் மீது திமுக கடுமையாகச் சாடியது. காங்கிரஸுடன் உறவு முறிந்துவிட்டதால், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இண்டி கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்தது.
காங்கிரஸுக்கு எதிரான மனநிலையில் உள்ள திமுகவிடம் பிரச்னை அடிப்படையில் ஆதரவு கோர பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக பலம் அதிகரிப்பு: ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் இருந்த நிலையில், அவா்களில் 7 போ் விலகி பாஜகவில் கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தனா். இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் உயா்ந்தது.
மேற்கு வங்க தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு அக்கட்சியும் பிளவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் தனி அணியாகப் பிரிந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை உறுதி செய்துள்ளனா். இதனால், பாஜகவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த மே 26-ஆம் தேதி பிடிஐ செய்தியாளிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், ‘மகளிா் இடஒதுக்கீடு சட்ட அமலாக்கத்துக்காக நீண்ட நாள் காத்திருக்க முடியாது. அடுத்த மக்களவைத் தோ்தலில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்’ என்றாா்.
தொடர்புடையது

அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டி போா் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை

அமெரிக்க மத்திய வங்கி தலைவராக கெவின் வாா்ஷ் நியமனத்துக்கு செனட் ஒப்புதல்

கிரேட் நிகோபாா் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

தோ்தல் ஆதாயத்துக்காக மகளிா் மசோதாவை கேடயமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



