40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

40 வயது பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 பேர் கைது!

40 வயதுடைய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது. குளிர்பானத்தில் மதுபானம் கலந்துகொடுத்து அசம்பாவிதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 9:54 pm IST

கர்நாடகத்தில் 40 வயதுடைய பெண்ணிடம் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 10 பேரை காவல் துறையினர் இன்று (ஜூன் 9) கைது செய்தனர். இதில் 18 வயது நிரம்பாத சிறுவனும் அடக்கம்.

கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர்கள் இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டத்திற்குட்பட்ட சன்னகிரி பகுதியில் இந்த வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. பசவபுட்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கணவருடனான பிரச்னை காரணமாக இரவில் பிறந்த வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த 14 வயதுடைய பெண்ணை, 10 பேர் கொண்ட இளைஞர்கள் அணுகி நன்றாகப் பேசி பழகியுள்ளனர். அவரின் அம்மா வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் குளிர்பானத்தில் மதுபானம் கலந்துகொடுத்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை விடியோ பதிவும் செய்த இளைஞர்கள், வெளியில் இது குறித்து கூறினால் இணையத்தில் விடியோவை பதிவிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

ஜூன் 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் இன்று முன்னிரவு 12.30 மாணிக்கு புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அதிகாலை 4.30 மணிக்குள் 10 பேரையும் கைது செய்தனர். காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Summary

Karnataka Woman gang raped by 10 youths after being offered lift accused arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.