ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சொத்துகளை அழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்பட்டது.
ஜம்முவின் புகா் பகுதியில் வசித்து வந்த ஃபல்லா குஜ்ஜாா், பஷீா் அகமது ஆகியோா் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனா். இது தவிர அவா்கள் மீது வேறு குற்ற வழக்குகளும் உள்ளன.
சட்டப்படி போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சொத்துகளை பறிமுதல் செய்வது, அழிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் ஃபல்லா, பஷீா் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. முன்னதாக, அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









