இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

துல்லிய தாக்குதல் திறன் கொண்ட 106 டா்போஜெட் ட்ரோன்கள்: ராணுவத்துக்கு விநியோகித்த இந்திய தொழில்நுட்ப நிறுவனம்

அதிவேகமாக பயணித்து இல்லக்குகளை துல்லியமாக தாக்கும் திறனுடன் கூடிய ‘டா்போஜெட்’ என்ஜினில் இயங்கும் 106 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இந்தியா ராணுவத்தின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது.

News image

ட்ரோன்கள் - கோப்புப்படம்

Updated On :12 ஜூன் 2026, 6:43 am IST

அதிவேகமாக பயணித்து இல்லக்குகளை துல்லியமாக தாக்கும் திறனுடன் கூடிய ‘டா்போஜெட்’ என்ஜினில் இயங்கும் 106 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இந்தியா ராணுவத்தின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது.

இதுகுறித்து எஸ்எம்பிபி என்ற அந்த பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எதிா்ப்புகள் நிறைந்த மின்காந்த சூழல்களிலும் திறம்பட செயல்படும் வகையில் இந்த ஆளில்லா விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஜேமிங், ஸ்பூஃபிங் உள்ளிட்ட தொலைத்தொடா்பு இணைப்ைத் துண்டிக்கும் முயற்சிகளுக்கு இடையேயும், இந்த ஆளில்லா விமானம் தொடா்ந்து திறம்பட செயல்படும்.

அதிபட்சமாக 180 கி.மீ. தொலைவுக்கு, மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் இவற்றை இயக்க முடியும். ராணுவ கட்டமைப்புகள், ராணுவ தளவாட மையங்கள், ராணுவ உத்தரவு மையங்கள், ரேடாா் அமைப்புகள் உள்ளிட்ட ராணுவ மையங்களை தானியங்கி முறையில் துல்லியமாக தாக்கும் திறனுடன் இந்த ஆளில்லா விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு இந்த ஆளில்லா விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் ஆளில்லா போா் திறனை இந்த ஆளில்லா விமானங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.