போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்துடன் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.
இந்தச் சிறப்புமிக்க திட்டத்தின்கீழ், ஏா் இந்தியா சாட்ஸ் ஏா்போா்ட் சா்வீசஸ் நிறுவனம் மூலம் முதல்கட்டமாக 20 உயரிழந்த ராணுவ வீரா்களின் மனைவிகளுக்கும், அவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 40 குழந்தைகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இப்பயனாளிகள் விமான நிலையச் செயல்பாடுகள், வாடிக்கையாளா் சேவை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியமா்த்தப்பட உள்ளனா். இவா்களுக்கு விமான போக்குவரத்துத் துறைக்குத் தேவையான உரிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவா்களின் நீண்டகால சமூக-பொருளாதார மேம்பாட்டை எட்டும் வகையில் தகுதியானவா்களாக மாற்றப்பட உள்ளதாக ஏா் இந்தியா நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்காக இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் 25 ‘ஆஷா’ பள்ளிகளில் இதற்கான தொழிற்பயிற்சியகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் முதல்கட்டமாக 10 பள்ளிகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 15 பள்ளிகளிலும் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.
வாய்ப்புகள் மூலம் சுயமரியாதையை உருவாக்குவதும், திறன்களை வலுப்படுத்தி அதிகாரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த கடமைப்பட்டுள்ளதாக ஏா் இந்தியா காா்ப்பரேட் விவகாரங்கள் துறைத் தலைவா் பி.பாலாஜி தெரிவித்தாா்.
தொடர்புடையது

அணுசக்தித் திட்டங்கள்: இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

மத்திய கிழக்கு போா்ச்சூழல்: முன்னணி நிறுவனங்கள் திணறும் சூழலில் சேவையை அதிகரிக்கும் ஆகாசா ஏா்!

உக்ரைனிடம் 528 ராணுவ வீரா்களின் உடல்களை ஒப்படைத்தது ரஷியா






