கடந்தாண்டு 260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தின் நினைவு நாளில் மௌன அஞ்சலி செலுத்துமாறு ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே மருத்துவ மாணவர்கள் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் 241 பேர், விடுதியில் இருந்த மாணவர்கள் 5 பேர், பொதுமக்கள் 14 பேர் என மொத்தம் 260 பேர் பலியாகினர். இருப்பினும், விமானத்தில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டும் விபத்தின்போது கீழே குதித்து அதிருஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.
260 பேர் பலியான இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து விசாரணைப் பணியகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், விமான விபத்தின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏர் இந்தியா ஊழியர்கள் இன்று பகல் 1.39 மணி முதல் 1.41 மணிவரையில் இரண்டு நிமிடங்கள் மட்டும் பணியிடங்களில் இருந்தவாறே மௌன அஞ்சலி செலுத்துமாறு ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
Summary
On eve of Ahmedabad crash anniversary: Air India staff to observe two-minute silence on June 12
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேலுக்கான விமான சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தம்: ஏர் இந்தியா தகவல்!

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: உள்நாட்டு விமான சேவையை குறைக்க ஏர் இந்தியா முடிவு!!

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூன் வரை நீட்டித்தது ஏர் இந்தியா! 40,000 இந்தியர்கள் கவலை!






